கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது…!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றை தினம் 21/11/2022 வேறு விசாரணைகாக  அழைப்பாணை ஒன்றை வழங்க பெண் ஒருவரின்   வீட்டிற்கு சென்ற பொலிசார் அஙகு அப்  பெண் கசிப்பு விற்றுக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
உடனடியாகவே பொலீசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் 10 போத்தல் கசிப்பையும் மீட்டுள்ளனர்.
 குறித்த பெண்ணையும், கைப்பற்றப்பட்ட கசிப்பையும், இன்றைய தினம்  நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி  பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் கட்டைக்காடு பகுதியில்   நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவருவதாகவும்,  பொலிசாரால் பலமுறை கைது செய்யப்பட்டும் கசிப்பு தொழிலை கைவிடவில்லை எனவும் கிராம மக்கள்  தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் இடம் பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுத்து அதனால் ஏற்படக் கூடிய பல்வேறு  பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்குமாறு பொதுமக்கள் பொலிசாரை கேட்டு கொள்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews