மனைவியுடன் வாக்குவாதம் செய்த கணவனை மூவர் அடித்து கொலை !

மாத்தறை ஊருபொக்க காவல்துறை பிரிவிற்குற்பட்ட கடவலகம பகுதியில் ஒருவரை மூவர் அடித்து கொலை செய்துள்ளாத காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்ட போது அயலில் வசிக்கும் மூவர் கணவரை தாக்கி கொன்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 32, 30 மற்றும் 19 வயது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருபொக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews