சாதாரணதர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெற இருந்தாலும் அந்தப்பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரேயே நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாதாரணதரபரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரலில் நடத்த எதிர்பார்த்தாலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையால், மேலும் தாமதங்கள் தவிர்க்க முடியாதவை என்றார்.

பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானித்ததாக அமைச்சர் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை 2023ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கான சீருடை தேவையில் 70 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 30 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews