இரண்டு வயது குழந்தையின் உடலில் ஜஸ் போதை, யாழ் போதனாவில் அனுமதி…!

காய்ச்சல் காரயமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 வயதான பெண் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஐஸ் போதைப் பொருள் எடுத்துக் கொண்டமை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கு பகுதியை சேர்ந்த 2 வயதான பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

பின்னர் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையில், குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழந்தையின் உடலில், ஐஸ் போதைப்பொருள் எடுத்துக் கொண்டமைக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்த போது,

குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. அதனால் குழந்தை வீட்டில் இருந்த போதைப்பொருளை விளையாட்டாக எடுத்து உட்கொண்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews