இந்திய றோளர் மோதி விபத்து, படகு சேதம், பல இலட்சம் நாசம், மீனவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினார்.(video)

இந்திய மீனவர்களது றோளர் படகு மோதி விபத்துக்குள்ளான படகு, மீனவர் கடலில் வீழ்ந்து அதிஸ்டவசமாக உயிர்தப்பித்தார்!
நான்கு இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம்செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை, வல்வைட்டித்துறை கரையில் இருந்து 4 கடல் மைல் தூரத்தில் நூற்றுக் கணக்கான இத்திய இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது.
இதன் போதே வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி மீன்பிடி சங்கத்தைச் சேர்ந்த எஸ்.விஜயராஜா என்பருக்குச் சொந்தமான படகினை றோளர் படகு மோதி உடைத்து நாசம் செய்துள்ளது.
இதன் போது மீனவர் கடலில் வீ்ந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பித்துள்ளார். மீனவரது 4 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்ராரின், பிரதமர் மோடிக்கும் மீனவர்கள் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள் எமது வாழ்வாதாரத்தை் மேலும் பாதிப்படைய செய்ய வேண்டாம்.
எம்மை உயிரோடு வாழவிடுங்கள் இந்திய தமிழ் உறவுகளே!
2021 ம் ஆண்டும் இதே காலத்தில் எனக்கு வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது.
இதற்கு ஊடகங்களுக்கு பேட்டி குடுத்ததால் எனக்கு ஒரு கட்சியினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! எங்களுது வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்திய மீனவர்களது இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துங்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews