ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது தாக்குதல்: மூன்றறை வயது ஆண் குழந்தை பலி

மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்பிமகம பிரதேசத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது அயல் வீட்டார் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்றறை வயது ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரண்பிமகம, ஹூனுகெட்டவல பிரதேசத்தை சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேற்படி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வசித்து வந்த 38 வயது தாய், 19 வயது மகன், 15 வயது மகள் மற்றும் மூன்றறை வயது ஆண் குழந்தை ஆகியோர் மீது அயல் வீட்டை சேர்ந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இரு வீட்டாருக்கும் இடையில் மிக நீண்டகாலமாக நிலவி வந்த பகை காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்துள்ள பொலிஸார், குறித்த நபர் தாக்குதலுக்கு பயன்படுத்தியத கூரிய ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews