யாழ்.மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கில் 153 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 80 பேர் உட்பட வடக்கில் சுமார் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 413 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன்போதே 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதன் விபரம் வருமாறு,

யாழ்.மாவட்டத்தில் 80 பேருக்கு தொற்று உறுதி.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 24 பேர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 10 பேர்,

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 05 பேர், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், நொதேர்ன் சென்ரல் ஹொஸ்பிரில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேருக்கு தொற்று. 

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 17 பேர், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 12 பேர், 

வவுனியா மாவட்டத்தில் 18 பேருக்கு தொற்று.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேருக்கு தொற்று. 

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 04 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வவுனியா விமானப்படை முகாமில் 03 பேர்,முழங்காவில் கடற்படை முகாமில் 02 பேர்,

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews