அகரம் நிறுவனத்தால் முள்ளியவளையில் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு…..!

குடத்தனை அகரம் உதவும்கரங்கள் நலன் புரிச்சங்கத்தினூடாக அமரர் வைத்திலிங்கம் வேதலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினமான நேற்று முன்தினம்  07.11.2022 கனடா நாட்டில் உள்ள அவரது மனைவி வேதலிங்கம் மதுரமணி மற்றும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடன்  வேதலிங்கம் அவர்களை  நினைவுகூரும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் உள்ள கதிர் கல்விநிலையத்தில்   கல்வி கற்பதற்கு கூட வசதிவாய்ப்புக்கள் குறைந்த நிலையில் உள்ள 50 மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் முள்ளியவளை கதிர் கல்விநிலைய ஆசிரியர்களான வரதன், ஜெயதர்சன்,  முள்ளியளை கதிர் கல்விநிலைய மாணவர்கள், ஆசிரியர்கள்,  கிராம மக்கள் , அகரம் ஒருங்கிணைப்பாளர், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: admin