மூன்று மாவீரர்களின் தந்தை மரண சடங்குக்கு உதவிய மேயர்!

கிளிநொச்சி மாவட்டத்தின்  புது முறிப்பு பகுதியில் மூன்று முறிப்பு பகுதியில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் தந்தையொருவர் சுகயீனம் காரணமாக  இறைபதம் அடைந்துள்ள நிலையில் அவரது குடும்பம்  மிக வறுமையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த தந்தையின் மரண சடங்குக்கு உதவி கோரியிருந்தனர். அவர்களின் நிலையை கருத்திற்கொண்டு யாழ் மாவட்ட மேயர் திரு.மணிவண்ணன் இறுதி சடங்குக்கான உதவி தொகை ஒன்றினை வழங்கி வைத்திருந்தார்.
பல அரசியல் பிரமுகரிடம் உதவி கோரியிருந்தும் யாரும் முன் வராததையடுத்து குடும்பத்தாரின் நிலையை உணர்ந்து அவர்களின் நிலையயை கருத்திற்கொண்டு மரணச்சடங்குக்கான உதவி தொகையை வழங்கியுள்ளார்.

Recommended For You

About the Author: admin