லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(6) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடை எரிவாயு கொள்கலனின் விலை 200 முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட ஒரு தொகையினால்  அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் சரியானை தொகை பின்னர் அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்,  நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews