சட்டவிரோத  மணல்  அகழ்ந்த  J.C.P இயந்திரம்  பறிமுதல்””

தருமபுர  பொலிஸ்  பிரிவுக்குற்ப்பட்ட  கல்மடு  குளத்தில்  பிரதான  நீர்  பாயும் பகுதியான  நெத்தலியாற்றுப்பகுதியில் பல வருடகாலமாக  சட்டவிரோதமான  முறையில் மணல் அகழ்ந்து கொண்டிருந்த jcp இயந்திரம் தரமபுரம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பல காலமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்களால் தெரிவிக்கப்பட்ட குற்றச் சாட்டை அடுத்தே நேற்று முன்தினம் குறித்த ஜேசீபி இயந்திரம் மணல் அகழ்வில் ஈடுபட்துக் கொண்டிருந்தபோது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சாரதி கைது செய்யப்பட்டு பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தருமபுரம் போலீஸார் மேற்கொண்டுவருவதுடன் கிளி நொச்சி நீதி மன்றில் ஒப்படைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews