இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இரு நாடுகள்

ரஷ்ய மற்றும் பிரான்ஸ் விமான சேவைகள் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முக்கிய விமானச் சேவைகளில் ஒன்றான ‘அஸூர் எயார்’ இன்று (3) முதல் விமான சேவையைத் தொடங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘எயார் பிரான்ஸ்’ நாளை (4) முதல் விமான சேவையைத் தொடங்கும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விமானங்கள் வாரந்தோறும் சேவையில் ஈடுபடும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews