மாவீரன் பண்டார வன்னியனுக்கு இன்று வவுனியாவிலும் நினைவு…!

வன்னி மண்ணின் வீர மிகு மாவீரன் பண்டார வன்னியன் ஆங்கிலேய படைகளிடமிருந்து முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்றாகும்.

மாவீரன் பண்டார வன்னியனின் 219 வது வெற்றிநாள் இன்று வவுனியாவில் உள்ள பண்டார வன்னியன் சதுக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் சமூக சிவில் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலரும் மாவீரன் பண்டார வன்னியனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

வரலாறுகள் ஓரு இனத்தின் இருப்புக்கானவை மட்டுமல்ல. அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை..
#வன்னி மன்னன் மாவீரன் பண்டார வன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்று.

#Bandaravanniyanking #Kingdomofvani #வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம்#

Recommended For You

About the Author: admin