சிறுதீவு சூலாயுதருக்கு சைவ இளைஞர்களால் சிறப்பு வழிபாடு.

யாழ்ப்பாணம் பண்ணை சிறுத்தீவில் (பழைய பெயர் சிவன் தீவு) வீற்றிருந்து அருள் ஆட்சி புரியும் சூலாயுதர் சிவன் கோவிலில் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை இந்து இளைஞர்களால் 3 வருடங்களின் பின் பூசைகள் நடாத்தப்பட்டன.

 குறித்த சிவன் ஆலய மூல மூர்த்தியான சூலாயுதனார் கடந்த 2017 ம் ஆண்டு விஷமிகளால் காணாமல் ஆக்கப்பட்டு மீண்டும் அதே ஆண்டில் சைவ  மீனவர்களால் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2017 ல் குறித்த ஆலயம் விஷமிகளால் இல்லாது ஒழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சைவ மீனவர்கள் பாதுகாத்து வழிபாடு செய்வது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews