யாழில் கத்திக்குத்து தாக்குதல்!கணவன், மனைவி வைத்தியசாலையில் அனுமதி

யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார்.

இதன்போது இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin