அரச சேவையில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்! எச்சரிக்கும் சம்பிக்க

அரச உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினால் அரச சேவையில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  5 வருட காலத்திற்கு  வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினால் இவ்வாறு அரச சேவையில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் இச்சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

Recommended For You

About the Author: admin