யாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடலியடைப்பு பகுதியில் இம்மாதம் இரண்டு வீடுகள் உடைத்து திருடியமை மற்றும் ஒரு கடை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (30.09.2022) பதிவாகியுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்படும் வேளையில் 5 கிராம் ஹெரோயினும், 55 ஆயிரம் ரூபா பணம் மற்றும் திருடப்பட்ட பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin