ஜனாதிபதி அறிவித்த பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானது!

கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கான ரகசியத் தகவலைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட சட்டத்தின் எல்லைக்குள் விதிமுறைகள் இல்லை என்பதை 1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியச் சட்டம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இந்த உத்தரவுகள், ஒழுங்குமுறைகளின் பொருள் மற்றும் அவற்றின் நோக்கம் தெளிவாக சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அடிப்படை உரிமைகளை அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin