யாழ்.அராலி – ஊரத்தி கிராமத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் வீசி அட்டகாசம்.. | அராலியில் வன்முறை.

யாழ்.அராலி மத்தி ஊரத்தி பகுதியில் உள்ள காணிகளில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,ஊரடங்கு காரணமாக யாரும் வெளியில் வராத சந்தர்ப்பத்தில் இனந்தெரியாதவர்கள் வயல்களில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை தூக்கி கிணற்றில் வீசியுள்ளனர்.

காலை வேளையில் வயல் உரிமையாளர்கள் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை தேடியபோது அவை கிணற்றில் தூக்கி வீசப்பட்டு இருந்தமை அவதானிக்கப்பட்டது.சுமார் எட்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டு இருந்ததுடன்

இரண்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews