கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

இலங்கை அதிகாரிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை செப்டம்பர் 16ம் திகதி நடைபெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்போது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகளுக்கு நீண்ட கால முதலீடுகள் மூலம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமொன்றுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin