பளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது. 4 உழவு இயந்திங்களும் கைப்பற்றல்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  குறித்த கிராம மக்களால் பளை பொலீசாரின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து
கடந்த (16) மற்றும் (17) ஆகிய இரண்டு நாட்களு.்  மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றி வளைப்பின் போது 4 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  4சந்தேக நபர்களையும் பளயய பொலீசார் கைது செய்துள்ளனர்..
கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும்  (21)புதன்கிழமை அன்று 4 உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews