தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி.

தியாகி திலீபனின் 35வது நினைவேந்தல் ஊர்தி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு மற்றும் விசுவமடு பகுதியினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது.

மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்ட நிலையில், மக்கள் தமது உணர்வு பூர்வமான அஞ்சலியினை செலுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் முள்ளியவளை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் ஊடாக வவுனியா சென்று வவுனியாவில் இருந்து மன்னார் மற்றும் கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் வரை சென்றடைய உள்ளது.

இவ்வூர்தியில் தியாகி திலீபன் அவர்களின் திருஉருவ தாங்கிய நினைவு ஊர்தி மக்களின் அஞ்சலிக்காக வீதிகளில் நிறுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews