உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க காத்திருப்பர்களுக்கான அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டீ தர்மசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த விண்ணப்பங்களை நாளை முதல் இணையவழி வாயிலாக அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீள்திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin