எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது.

இதற்காக ஜனாதிபதி செயலகம், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பயணத்திற்கான ஒருங்கிணைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் தினத்திற்கு முதல் நாள் ஜனாதிபதி லண்டன் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார். இரண்டாவது எலிசபெத் மகாராணி கடந்த வியாழக்கிழமை ஸ்கொட்லாந்தின் பல்மோரல் காஸ்டலில் காலமானார்.

மகாராணியாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கை அரசு அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தனது இந்த குறுகிய கால விஜயத்தின் போது பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

Recommended For You

About the Author: admin