பண்டாரவளை நகரசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் கைது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரவளை நகரசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில், பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews