புலமைப்பரிசில், க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டிசம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள், 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin