இலங்கைக்கு பணம் அனுப்பாதீர்!! வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செய்தி

இலங்கை அரச பயங்கரவாதம் செயற்படும் நாடாக இருப்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரையில் ஒரு சதத்தைக் கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடம் மரியாதையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத்தை குறைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கத்தின் கீழ் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை துன்புறுத்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்  என்றும் குறிப்பிட்டார்.

இது உங்கள் அனைவருக்கும் நடக்கப் போகிறது, உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கும் என்பதை பொலிஸார், இராணுவத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியை மீளாய்வு செய்வதாகக் கூறியதைக் கண்டோம்.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 2002ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாண தளபதியாக இருந்தபோது. அப்போதும், தான் பாதுகாப்பு உத்தியை பரிசீலனை செய்வதாகக்கூறி, இராணுவத்தின் பலத்தை குறைக்க முயன்றனர். எனினும் அப்போது தாம் இராணுவத்தை குறைக்கவில்லை, தேவையான அளவுக்கு இராணுவத்தை வரையறுக்கின்றோம் என்றார்கள்.

அந்த விடயங்கள்தான் இவர்களின் தலையில் எப்போதும் இருக்கும். மீண்டும், முப்படைகள், இராணுவம் மீது கைவைக்கும் திட்டமே இது.

இலங்கை அரச பயங்கரவாதம் செயற்படும் நாடாக இருப்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரையில் ஒரு சதத்தைக் கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin