எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! வெளியாகிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 இல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அமைச்சருக்குள்ள அதிகாரத்தின் கீழ்உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என்று சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இம்முறை அந்த தொகை எட்டு முதல் பத்து மில்லியன் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin