நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்கள்! ஒருவர் கைது….!

சாவகச்சோி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் சிறைக்காவலர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதும் மற்றய நபர் தப்பி  ஓடியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றிருக்கின்றது. ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான குறித்த இரு சந்தேகநபர்களும் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு  14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட நிலையில் சிறைக் காவலர்களின் பிடியிலிருந்து சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டபோதும்,  மற்றொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் பணிகள் தீவிரமாக இடம் பெற்று வருகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews