கசூரினா கடற்கரைக்கு செல்ல விசேட நடைமுறை!காரைநகர் பிரதேச சபையில் தீர்மானம்.

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தலைமையில் இன்று சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கசூரினா கடற்கரை நுழைவுக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்களில் வரும் நபர்களுக்கான கட்டணம் நீக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் இரவு 9 மணிவரை கசூரினா கடற்கரை உல்லாசப் பயணிகளுக்காக திறந்திருக்கும். நீர்விநியோகம் நேர அட்டவணைப்படி நாளை முதல் நடைபெறும். இதன்படி J47 திங்கள், J46,48 செவ்வாய், J40,41 புதன்,J45 வியாழன்,J44 வெள்ளி, J 42,43சனி ஆகிய தினங்களில் மட்டுமே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

விசேட தேவைகளுக்காக தண்ணீர் தேவைப்படுவோர் சபை அலுவலகத்தில் முன்கூட்டியே கட்டணம் செலுத்துவதன் மூலம் சேவைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என தீர்மானிக்கப்பட்டது,

Recommended For You

About the Author: Editor Elukainews