ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு: சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு: கைதை கண்டித்து மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும்  கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன் திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நேற்று மாலை ராமேஸ்வரத்தில் இரந்து மீன் பிடிக்க சென்ற நிஷாந்த் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் அழைத்து சென்றனர்.இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கை யை கண்டித்து உடனடியாக மீனவர்கள் படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு  செய்தனர்.
மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனிடையே இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன் திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். தினசரி அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் மீன்பிடித்தொழில் நடைபெறாததால் நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews