எரிபொருள் விநியோகத்துக்கான கியூஆர் பதிவு மீண்டும் ஆரம்பம்!

தேசிய எரிபொருள் கியூஆர் குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் அந்த சேவை முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய பதிவுகளுக்காக இந்த அமைப்பு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews