50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு ஐஓசி திட்டம்.

நாடளாவிய ரீதியில் 50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியாக வாடகை வாகனங்களுக்காக கிவ்.ஆர் குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்தி அதனூடாக அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அடுத்து வரும் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews