சாரதியின் கவனக்குறைவால் பேருந்திலிருந்து விழுந்த மாணவி! தப்பி ஓடிய பேருந்தை மடக்கி பிடித்தவர்கள் கைது,

கவன குறைவால் பாடசாலை மாணவியை விபத்திற்குள்ளாக்கிய இ.போ.ச பேருந்தையும் அதன் சாரதியையும் விடுவித்த பொலிஸார் விபத்தில் காயமடைந்த சிறமியின் சகோதரர் உட்பட இருவரை பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று காலை 7.45 மணியளவில் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. தனியார் வகுப்புக்கு சென்ற மாணவி இ.போ.ச கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்தில் ஏறுவதற்கு சென்றுள்ளார். 

எனினும் மாணவி ஏறுவதற்கு முன்னர் பேருந்தை வேகமாக எடுத்ததனால் மாணவி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மாணவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து பேருந்தினை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற நிலையில் சிறுமியின் சகோதரர் உட்பட சிலர் பேருந்தை வழி மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரம் பொலிசார் விபத்தினை ஏற்படுத்திய பேருந்தினையும் விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் உடனடியாகவே விடுவித்துள்ளதுடன் விபத்தை மூடி மறைக்கும் விதத்தில் 

பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்திப்பதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews