கொரோணா தொற்றால் வல்வெட்டித்துறை நகரபிதா இறப்பு..!

யாழ் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோணா தொற்றால் காலமானார்

திடீர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ம் திகதி சுகாதார பிரிவினால் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews