இரு வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி: 17 பேர் இடப்பெயர்வு.

நுவரெலியா மாவட்டம் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெப்லோ பிரதேசத்தில் இரு வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். டெப்லோ ஜனபதய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மண்சரிவு காரணமாக 8 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் நோட்டன்பிரிட்ஜ் பிரதேசத்திலுள்ள விகாரையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் மண்ணுள் புதையுண்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews