ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியவிலுள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மடபாத்த, கொழும்பு 5 ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 18, 22 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலே மூவரை கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு பிலியந்தலை, நாரஹேன்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews