முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR நடைமுறையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்

முறிகண்டி பார ஊர்திகள் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும்  QR நடைமுறையில் எரிபொருள் நேற்று 01.08. வழங்கப்பட்டது.
எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக பெற்று சென்றனர். இருப்பில் உள்ள எரிபொருள் தீரும்வரை மக்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என பார ஊர்திகள் சங்கத்தின் நிறைவேற்று முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான, முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம், இந்துபுரம் உள்ளிட்ட கிராம மக்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் சில கிராமங்களை சேர்ந்த மக்களும் எரிபொருளை வரிசையிலிருந்து பெற்று வருகின்றனர்.
எவ்வித குழப்பங்களுமின்றி மக்கள் எரிபொருள் பெற்று வரும் நிலையில், மாங்குளம் பொலிசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews