இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி   கிளையின் ஒழுங்குபடுத்தல் இரத்ததான முகாம்….!

யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி   கிளையின் ஒழுங்குபடுத்தல் இரத்ததான முகாம் இன்றைய தினம் மூத்த விநாயகர் கோவிலடி  மண்டபபத்தில்  இடம்பெற்றது.
 குறித்த  இரத்ததான முகாம்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி கிளை தலைவர் எஸ். ரகுகரன் தலைமையில் இடம்பெற்றது.
 இரத்ததான முகாமில் பொதுமக்கள் இராணுவத்தினர் என 38 பேர் இரத்தம்  வழங்கியிருந்தனர்.
குறித்த குருதியை பெற்றுக்கொள்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் சமூகமளித்து குருதியை பெற்றுக்கொண்டனர்.
 குறித்த இரத்த தான முகாம்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கரவெட்டி கிளை தலைவர் எஸ.ரகுபரன். செயலாளர் பகீரதன். நிர்வாக உறுப்பினர் என்.நாகேந்திரன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews