ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரப்படையினரிடம்

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றை பொறுப்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர்.

விசேட அதிரடிப்படையினரின் வசமானது ஜனாதிபதி மாளிகை(Photos) | The President S House Is In

இதன்படி, ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் நாட்டில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்க்கது.

Gallery Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews