கோட்டா கோ கம பகுதியில் இரு குழுவினருக்கு இடையில் முறுகல்: நால்வருக்கு காயம் –

கோட்டா கோ கம பகுதியில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு 15, வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15, 17 மற்றம் 20 வயதுகளையுடைய இளைஞர்கள் நால்வரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 72ஆவது விடுதிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews