யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 27 பேருக்கும் கொரோனா தொற்று.

யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 27 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த மூவர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 27 பேருக்கு தொற்று.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் 07 பேர், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 06 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 12 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 03 பேர் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை,காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர், பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 02 பேர்,

பலாலி விமானப்படை முகாமில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews