தொடர்ச்சியாக நடந்துவந்த துவிச்சக்கர வண்டி திருட்டு..! யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் கைது, 15 துவிச்சக்கர வண்டிகள் மீட்பு.. |

தொடர்ச்சியாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர்களை சீ.சி.ரீ.வி கமரா காட்சிகளின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் கைவேலி பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், 13 துவிச்சக்கர வண்டிகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றது.

புதுக்குடியிருப்பில் மேலும் இருவேறு இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்வங்களில் யாழ்ப்பாணம் உரும்பிராயை சேர்ந்த ஒருவரும்,

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவருமாக 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், மொத்தமாக 15 துவிச்சக்கர வண்டிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.

கைதான சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews