போலீஸ் என கூறி லஞ்சம் பெற்றவர் காட்டினார்…!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பழக்கடை ஒன்றில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப்படுத்தி கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப்படுத்திய இருவர் கடந்த 31திகதி பழக்கடை வியாபாரி ஒருவரை மிரட்டி 7 ஆயிரத்து 500 ரூபாய்கும்

அதிகமான பணத்தை கப்பமாகப் பெற்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதுதொடர்பில்  மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அருகில் உள்ள

கடை ஒன்றின் சிசிரிவி கமராவின் பதிவைப் பெற்ற புலனாய்வுப் பிரிவினர் இருவரை இனங்கண்டு பழக்கடை வியாபாரிகளிடம் ஒளிப்படங்களை  கொடுத்து

அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கேட்டிருந்தனர். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரில் ஒருவர் நேற்று பிற்பகல் 2.40 மணியளவில்

பேருந்து நிலையத்துக்குள் வந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவலை வழங்கியிருந்தார்கள்.

அவர்கள் வரும்பொழுது சந்தேக நபர் தப்பிக்க முயன்றபோது அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டார்.

சந்தேக நபரைப் பொறுப்பேற்று  மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குற்றதடுப்பு பிரிவிடம்  ஒப்படைத்தனர்.

விசாரணையில் குறித்த நபர் கீரிமலை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்தவர் என்று தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மற்றைய சந்தேக நபரைக் கைது செய்யும் நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews