பருத்தித்துறையில் கொரோனா நோயாளி உயிரிழப்பு….!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி துன்னாலை தெற்கை சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் 5 மாதங்களுக்கு முன்னரே உடல் நலக் குறைபாடு காரணமாக படுக்கையில் இருந்துள்ளார். குறித்த நபருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டு

சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews