நல்லைக்கந்தன் ஆலயத்திற்க்கு நூறுபேருக்கு மட்டுமே அனுமதி….!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் ஆலய உள் வீதியில் 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் சமகால நிலமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.  

இந்நிலையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வருட ஆலய உற்சவத்தினை திறம்பட செயற் படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews