யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று சமையல் எரிவாயு விநியோகம்..! லிட்ரோ நிறுவனம்…!

நாடு முழுவதும் இன்று 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் விநியோகம் செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகரப் பகுதிக்கு மேலதிகமாக, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் உள்பட ஏனைய மாவட்டங்களுக்கும் இந்த நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை அனுப்பியுள்ளது.

50 ஆயிரம் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படும் என்றும்,

எரிவாயுவைப் பெறும் முகவர்களின் பட்டியலை அதன் இணையதளத்தில் காணலாம் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews