நேற்று தடுப்பூசி பெற்றவர் திடீர் மரணம்.வல்வெட்டி துறையில் சம்பவம்….!

யாழ்.வல்வெட்டித்துறை – ஊறணியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றய தினம் மதியம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையைப் பெற்றுக்கொண்ட நிலையில் நேற்று நள்ளிரவு திடீர் சுகயீனம் ஏற்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக அவர்களால்  கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தின் மீது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews