இலங்கையில் உள்ள தமது படகுகளை மீட்டு தரக்கோரி தங்கச்சிமட மீனவர்கள் போராட்டம்.

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரக்கோரி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த அனைத்து விசைப்படகு, நாட்டுபடகை மீட்டுத்தரக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும்,
கடற்கரை பகுதியில் 60 லட்சம் மீனவர்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே அரசியல் கட்சி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 75 வருடங்களாக மீனவர்களுக்காக அரசியல் பிரதிநிதித்துவம் அரசியல் கட்சிகளால் மறுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை தமிழகத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே மீனவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு இலங்கை கடற்படை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு மீனவ பிரச்சனைகளை அரசிடம் கொண்டு சேர்க்க மீனவர்களுக்கு சரியான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை எனவே மீனவர்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அரசியல் கட்சிகள் ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தி இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews