யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரமாக எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் காத்திருந்த போதிலும் எரிபொருள் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிர்வாகத்தினருடன் குழப்பத்தில் ஈடுபட்டதோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கொள்கலனை திறந்து காண்பித்தால் மாத்திரமே தாங்கள் அவ்விடத்தைவிட்டு செல்வோம் என கூறி குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தமது எரிபொருள் நிரப்பு நிலைய எரிபொருள் கொள்கலன்களை திறந்து காண்பித்த பின்னர் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்  யாழ்ப்பாண குடாநாட்டில் நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது

Recommended For You

About the Author: Editor Elukainews